• Download mobile app
19 Dec 2025, FridayEdition - 3600
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வால்பாறையில் சுற்றித்திரியும் சிறுத்தைகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

August 6, 2018 தண்டோரா குழு

கோவை வால்பாறை டவுன் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை வால்பாறை டவுன் பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வால்பாறை அஞ்சல் அலுவலகம் பகுதியில் சிறுத்தை நடமாடுவது அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து,வால்பாறை டவுன் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகிரித்துள்ளதால் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதையடுத்து வனத்துறையினர் அங்கு ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க