• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வடவள்ளியில் மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் – போலீசில் புகார்

March 22, 2019 தண்டோரா குழு

கோவை வடவள்ளி இடையர்பாளையம் குடுயிருப்பு அருகே மசாஜ் செண்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக கூறி அப்பகுதி குடியிருப்பு மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

கோவை வடவள்ளி இடையர்பாளையம் குடுயிருப்பு அருகே கடந்த பல மாதங்களாக மசாஜ் மற்றும் அழகு நிலையம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்ப்பட்டு வருகிறது. இங்கு பாலியல் தொழில் நடத்தப்படுவதாகவும், அதிகளவு ஆண், பெண்கள் என இரவு நேரங்களில் குடிபோதையில் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

பெண்களும், குழந்தைகளும் அதிகளவு நிறைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இம்மாதிரியாக விசயங்கள் நடப்பதை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

மேலும் படிக்க