May 27, 2019
தண்டோரா குழு
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு மண்டலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை வடக்கு மண்டலத்தில் உதவி ஆணையாளர் ரவிக்குமார் வரிப்புத்தகம் வழங்குவதற்காக 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றசாட்டை அடுத்து வடக்கு மண்டலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ராஜேஷ் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 போலீசார் உதவி ஆணையாளர் ரவிக்குமார் அலுவலக அறையில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.