• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வடக்கு ஆர்.டி.ஒ அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29-ம் தேதி பொது ஏலம்

March 14, 2022 தண்டோரா குழு

கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 29-ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் கூறியிருப்பதாவது:

கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் இயக்க இயலாத நிலையிலும், துருப்பிடித்த நிலையிலும் உள்ளது. போக்குவரத்து கமிஷனர் சுற்றறிக்கையின்படி இந்த வாகனங்களை திறந்த வெளி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 16-ம் தேதி முதல் கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் 24-ம் தேதி மாலை 4 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிணை தொகை
ரூ.10 ஆயிரம் வங்கி வரைவோலையாக இணைத்து 25-ம் தேதி மாலை 4 மணிக்குள் கோவை வடக்கு வட்டாரப போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

நடப்பு ஜிஎஸ்டி கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள விண்ணப்பம் வழங்கப்படும். ஏலம் விடப்படும் வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் மட்டும் 16ம் முதல் 25ம் தேதி வரை அலுவலகத்தில் நேரடியாக பார்வையிடலாம். துடியலூரிலுள்ள கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 29-ம் தேதி காலை 11 மணிக்கு திறந்தவெளி பொது ஏலம் விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க