• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீவிபத்து

September 7, 2018 தண்டோரா குழு

கோவை ராமநாதபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கலையரத்தில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பழைய மேசை, டேபிள் உட்பட பொருட்கள் எரிந்து சாம்பலானது.

கோவை ராமநாதபுரம் பகுதியில் மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் முதல் மாடியில் பழைய மேசை, டேபிள்கள் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை திடீரென அந்த கலையரங்க வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் கலையரங்க வளாகத்தில் இருந்த பழைய மேசை,டேபிள் உட்பட பொருட்கள் எரிந்து சேதமானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

விபத்து நடந்த பள்ளி வளாகத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் விபத்து குறித்து ராமநாதபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க