• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரத்னபுரியில் பீரோவில் இருந்த 20 பவுன் நகை துணிகர கொள்ளை

January 20, 2021 தண்டோரா குழு

கோவை ரத்தினபுரி பகுதியில் பட்டப்பகலில் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்ட் ஒர்க்கர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகை துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

கோவை ரத்தினபுரி, பகுதியில் வசிப்பவர் நாகராஜ் (வயது 38), இவர் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டர். ஒர்க்ஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு அவரும் அவர் மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க