January 20, 2021
தண்டோரா குழு
கோவை ரத்தினபுரி பகுதியில் பட்டப்பகலில் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்ட் ஒர்க்கர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகை துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,
கோவை ரத்தினபுரி, பகுதியில் வசிப்பவர் நாகராஜ் (வயது 38), இவர் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டர். ஒர்க்ஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு அவரும் அவர் மனைவியும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது வீடு உடைந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.