• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரங்கே கவுடர் வீதியில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு

June 22, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கோவை ரங்கே கவுடர் வீதியில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கோவையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மளிகை பொருட்கள் மொத்த விற்பனை நிறுவனங்கள் அதிகம் உள்ள ரங்கே கவுடர் வீதியில் தூய்மைப் பணியாளர்கள் கிருநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க