• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை – மேட்டுப்பாளையம் இடையே 20ஆம் தேதி முதல் கூடுதல் ரயில் சேவை

June 18, 2022 தண்டோரா குழு

கோவை – மேட்டுப்பாளையம் ரயில் சேவையில், 20ஆம் தேதி முதல் கூடுதல் டிரிப்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கோவையில் காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில்,நண்பகல் 12.35 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். நண்பகல் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் ரயிலானது, 1.50 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.இரவு 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் ரயில், இரவு 8 மணிக்கு கோவை சென்றடையும்.

8.25 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், இரவு 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும்.இந்த ரயில் வடகோவை, துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க