கோவை – மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் இரு சக்கரத்தில் வந்த ஒருவர் பலியாகினார்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு (சத்ய ஸ்ரீ டிரான்ஸ்போர்ட்) என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா கல்வி நிறுவனம் அருகே பேருந்து வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அதைபோல் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியிலிருந்து எதிரே இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்ற பேருந்து எதிரே இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதியுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஸ்டீபன் பிரபு எனும் 22 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இதையடுத்து பேருந்துக்குள் அடியில் இருந்த நபரை எடுப்பதற்காக பொக்லைன் உதவியுடன் பேருந்தை கவிழ்த்தனர். பின்னர் இறந்த நபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை – மேட்டுபாளையம் சாலையில் தனியார் பேருந்துக்கள் போட்டிபோட்டுக்கொண்டு அசுர வேகத்தில் செல்வதால் இது போன்று அடிக்கடி விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மின்னல் வேகத்தில் செல்லும் தனியார் பேருந்துகளால், சாலைகளில் பயணிக்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றசாட்டியுள்ளனர்.
சர்வதேச யோகா தினம்; ஆதியோகியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சி -நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு பயிற்சி
பேரூர் ஆதீனம்,ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி “பாரம்பரிய சிவவேள்வி பூஜை”!-ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்கிறார்
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு