June 25, 2019
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காதல் ஜோடியை அரிவாளால் வெட்டியதால் கனகராஜ் என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியினை சேர்ந்த கனகராஜ் என்ற வாலிபர் தாழ்த்தபட்ட சமூகத்தை சேர்ந்த தர்சினி பிரியா என்ற பெண்ணை காதலித்து இன்று திருமணம் செய்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கனகராஜினின் அண்ணன் வினோத் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தர்சினா பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு கொன்டு செல்லப்பட்டுள்ளார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.