• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை முந்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

August 31, 2022 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை அருள்மிகு முந்தி விநாயகர் கோயிலில் நான்கு டன் மலர்களால் விநாயக பெருமானுக்கு மாப்பிள்ளை ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள திருக்கோவில்.19 அடி உயரம் 10 அடி அகலத்துடன் சுமார் 190 டன் எடை கொண்ட விநாயக பெருமானுக்கு இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதல் அபிஷேகம் நடத்தப்பட்டது.

சுமார் ஒன்றரை மணி நேரம் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சுமார் நான்கு டன் எடையில் பல்வேறு வகை மலர்களால் விநாயக பெருமானுக்கு சிறப்பு மாப்பிள்ளை ராஜ அலங்காரம் செய்யப்பட்டதுடன் 36 வகை நெய்வேத்தியங்களுடன் வழிபாடு நடத்தப்பட்டது.அதிகாலை 5 மணி முதல் நடைபெற்று வரும் அபிஷேக அலங்காரத்தை காண அதிகாலை மூன்று மணி முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்து அருள்மிகு விநாயக பெருமானின் அருள் பெற்றனர்.

மேலும் படிக்க