• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு பொறுப்பேற்பு

March 6, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு மற்றும் துணை பிரதேச தளபதியாக வித்யாஸ்ரீ தர்மராஜ் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

தமிழக போலீசாருக்கு உதவுவதற்காக, மாநகர், மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. அதேபோல, தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படை வீரர்களில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தன்னார்வ சேவை அமைப்பாகும். தமிழகம் முழுவதும் 15,000 ஊர்க்காவல் படையினர் சேவையாற்றி வருகின்றனர். அதைபோல், ஊர்காவல் படையில் பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் பகுதி நேர சேவையாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சீருடைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் மேட்டுப்பாளையம் அலகு, துடியலூர் அலகு, பொள்ளாச்சி அலகு என மூன்று குழுக்களை உள்ளடக்கிய ஊர்க்காவல் படையில் 387 ஊர்க்காவல் படையினர் உள்ளனர். இவர்கள் கோவை மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பாதுகாப்பு பணிகளிலும், கோவில் திருவிழாக்களிலும், இரவு ரோந்து பணிகளிலும், தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் பிரதேச தளபதியாக பாலாஜி ராஜு மற்றும் துணை பிரதேச தளபதியாக வித்யாஸ்ரீ தர்மராஜ் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இதன்பின் இவர்கள் மேற்கு மண்டல காவல்துறை ஐஜி மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் படிக்க