• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் இடமாற்றம்

February 16, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்திரவிட்டிருந்தார். மேலும், அதிகாரிகளை மாற்றம் செய்து, பட்டியலை வரும் 15-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவும் உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்திரவிட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாநகராட்சி கே.விஜயகார்த்திகேயன் தமிழ்நாடு ஊரக கல்வி நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டு திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஷ்ராவன் குமார் ஜட்டாவத் கோவை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்ட்டுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ஹரிஹரன் நகராட்சி நிர்வாக சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாமணி கோவை ஆட்சியராக பொறுப்பேற்க்கவுள்ளார். மேலும், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கோவை வணிகவரித்துறை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க