• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் 130 பேர் கைது

December 21, 2018 தண்டோரா குழு

கிராம நிர்வாக அலுவலங்களில் அடிப்டை வசதி செய்து தர கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிவறை, மின்சாரம்,குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும் உடனடியாக அவற்றை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 12 வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.12 வது நாளான இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது கிராம நிர்வாக அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் அதை செய்து கொடுக்க வேண்டும் எனவும், நாங்கள் அரசிடம் அதை கோரித்தான் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, முற்றுகை போராட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்கள்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீடீர் மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனையடு்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 130க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க