• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென தீப்பிடித்து எரிந்த கார்

December 6, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் வழக்கம். அதன்படி இன்றும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் முன்பு கூட்ட நெரிசல் காணப்பட்டது.

இந்த நேரத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து அந்த காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கார் முழுவதுமாக தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி காரில் பிடித்திருந்த தீயை அணைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் கூட்டம் இருந்த நேரத்தில் அங்கு கார் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க