• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா..!

July 15, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1480 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராசாமணியின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்து வருகிறது. தினமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை, கட்டுப்பாட்டு மண்டலங்களை நேரில் சென்று பார்வையிடுதல், கொரோனா வைரசை கட்டுப்பட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதிக்காதவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வந்தார்.

இந்த சூழலில், மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.தற்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க