June 28, 2019
தண்டோரா குழு
குளங்களில் மீன் பிடிப்பதற்கான உத்தரவை வழங்கிட கோரி கோவை வட்ட மீனவர் கூட்டறவு சங்கத்தினர் தரையில் வலை வீசி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையில் உள்ள 12 முக்கிய குளங்களில் கோவை வட்ட மீனவர் கூட்டறவு சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக மீன் பிடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்துடன், இவர்கள் மீன் பிடிப்பதற்கான உத்தரவு காலம் முடிவடைந்துள்ளது. எனவே விரைவில் உத்தரவு வழங்கிட கோரி மீன் வலையுடன் மீனவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு அளிக்க வந்தனர்.
இதில் அடுத்து 5 ஆண்டிற்கு குளங்களில் மீன் பிடிப்பதற்காகன உத்தரவை ஜனவாரி மாதமே வழங்க வேண்டிய நிலையில், இதுவரை குளங்களில் மீன் பிடிப்பதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினர். இதனால் உரிய அனுமதியின்றி குளங்களில் மீன் பிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுவதாகவும், பல்வேறு நபர்களும் மீன் பிடிக்க வருதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவதாக குற்றம்சாட்டினர். எனவே தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிட கோரி மீன் பிடிப்பது போல தரையில் வலை வீசியும், வலைக்குள் அமர்ந்து தூதன முறையில் வலியுறுத்தினர்.