• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை பகுதியில் யானை உயிரிழப்பு

March 17, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்ததுள்ளது வனத்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.உயிரிழந்த ஆண் யானைக்கு 30 வயது இருக்க கூடும் என்றும் ஆந்த்ராக்ஸ் நோயால் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து வனத்துறை உயரதிகாரிகள், வன அலுவலர்,வனவிலங்கு மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் யானை உயிரிழந்த இடத்திற்கு சென்றுள்ளனர். யானை உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட பின்பே உயிரிழப்பிற்கான சரியான காரணம் தெரியவரும்.

ஆந்தராக்ஸ் நோயால் உயிரிழந்திருக்க கூடும் என கூறபடுவதால் அப்பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்க காவல்துறையினர் தடுப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க