May 17, 2018 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 70 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
கோவை மாவட்டத்தில் மே மாதம் துவங்கியது முதலே தொடர்ந்து இரவு நேரங்களில் மழைய்து வருகிறது.இந்நிலையில் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.அதில் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அமைந்து உள்ள பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும்,குறைந்தபட்சமாக வால்பாறையில் 5 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.தொடர்ந்து இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என கோவையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.மேலும் சிறுவாணி அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.