• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

January 21, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், ஒரே தெருவில் 5க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோய்த் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘மாவட்டத்தில் 137 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், தனிமைப்படுத்தப்படுகின்றன. அதேபோல், ஒரே தெருவில் 5க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று கண்டறியப்படும் இடங்கள் அடைக்கப்படுகின்றன’’ என்றார்.

மேலும் படிக்க