• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் ரூ.616.15 கோடி மதிப்பீட்டில் 7064 குடியிருப்புகள் கட்டப்படுகின்றது -ஆட்சியர் தகவல்

December 21, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 26 திட்டப்பணிகள் மூலம் ரூ.616.15 கோடி மதிப்பீட்டில் 7064 குடியிருப்புகள் கட்டப்படுகின்றது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, செல்வபுரம், உக்கடம், காந்திபுரம், வெரைட்டி ஹால், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் 26 திட்டப்பணிகள் மூலம் ரூ.616.15 கோடி மதிப்பீட்டில் 7064 குடியிருப்புகள் கட்டப்படுகின்றது.

இதில் கோவைப்புதூர், திரு.வி.க.நகர், கல்லாமேடு, மெர்க்கரிக்கர் ரோடு, பேரூர் வடக்கு, பிள்ளையார்புரம், டோபிகானா, சூலூர், ஐயூடிபி காலனி, பன்னீர்மடை கிழக்கு ஆகிய இடங்களில் 10 திட்டப்பணிகள் மூலம் ரூ.220.74 கோடி மதிப்பீட்டில் 2561 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் நேதாஜிபுரம், சித்தாபுதூர், பேரூர் வடக்கு பகுதி-1, பேரூர் தெற்கு பகுதி-2, எழில் நகர், வெரைட்டிகால் ரோடு, பச்சனம்பதி, எம்.ஜி.ஆர் நகர், வால்பாறை, உக்கடம் பகுதி -4, சிக்கதாசம்பாளையம், சுந்தரம் வீதி, மூங்கில் மடைகுட்டை, சி.எம்.சி.காலணி -2, சித்தாப்பதூர் பகுதி-2, முல்லை நகர் ஆகிய இடங்களில் 16 திட்டப்பணிகள் மூலம் 4503 குடியிருப்புகள் ரூ.395.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றது.

இவ்வாறு சமீரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க