• Download mobile app
10 Apr 2026, FridayEdition - 3712
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

November 16, 2024 தண்டோரா குழு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (16.11.2024) கோவை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள்,ஆளிநர்கள்,அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினருக்காக வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமினை துவங்கி வைத்தார்.

இம்முகாம் மூலம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினரும் இலவச கண் பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று நடைபெற்ற முகாமில் சுமார் 150 நபர்கள் கலந்து கொண்டனர்.மேலும் வரும் நாட்களில் இதுபோன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க