• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பு – பொதுப்பணித்துறை

March 11, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 3.41 மீட்டர் உயர்ந்து உள்ளது பொதுப்பணித் துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவையில் கடைசியாக மழை பெய்து நான்கு மாதங்கள் கடந்து விட்டன. எனினும் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பிப்ரவரியில் கோவையில் நிலதத்தடி நீர்மட்டம் உயர்ந்தே காணப்படுகிறது. குறிப்பாக 12.20 மீட்டராக இருந்த நிலத்தடி நீர்மட்டம், இந்த ஆண்டு பிப்ரவரியில் 15.61 மீட்டராக உயர்ந்து உள்ளது, பொதுப்பணித் துறையினரின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு கோவையில் கடந்தாண்டு பெய்த கோடை மழையும், தொடர்ந்து பெய்த தென் மேற்கு பருவமழையும் முக்கிய காரணமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்தாண்டு கோவை மாவட்டத்தில் 244 சதவீதம் கூடுதலாக மழை பெய்து உள்ளது. இந்த மழை கோவை மாவட்டத்திற்கு தற்போது பயனுள்ளதாக அமைந்து உள்ளது. இருப்பினும் நான்கு மாதங்களாக மழைப்பொழிவு இல்லாத சூழலில், கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

மேலும் படிக்க