• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு 36 மருத்துவ குழுக்கள் அமைப்பு

November 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாக 36 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஊரகப் பகுதிகளில் தினசரி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பெரியளவில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. உயிரிழப்பும் இதுவரை ஏற்படவில்லை.

பருவமழை தீவிரமாகும் போது காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 12 வட்டாரங்களுக்கும் சேர்த்து 36 சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்கள் தேவைப்படும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க