• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்திலுள்ள 4000 ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக்கோரி பேரணி

December 3, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திலுள்ள நான்காயிரம் ஏக்கரிலான பஞ்சமி நிலங்களை மீட்டு தரக்கோரி தாழ்த்தப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி
நடத்தினர்.

சமூக நீதிக்கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்றனர். பட்டியலின மக்களுக்கு 1892 ஆம் ஆண்டு நிபந்தைனைகளுடன் வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் மற்ற சமூகத்தினர் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், சூலூர், அன்னூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, வால்பாறை, பேரூர் மற்றும் வடக்கு கோவை ஆகிய தாலுக்கா பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான பஞ்சமி நிலங்களில் 30சதவிகிதம் மற்ற சமூகத்தினரிடம் உள்ளதாகவும், மீதமுள்ள 70சதவிகிதம் நிலங்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் பெயர்களில் பதிவேடுகளில் காணப்பட்டாலும், பெரும்பாலும் மற்ற சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக பேரணியின்போது குற்றச்சாட்டப்பட்டது.

இப்பேரணியானது கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே துவங்கி சுமார் 3கி.மீ, பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

மேலும் படிக்க