• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் – மாநகராட்சி ஆணையர்

May 21, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 1முதல் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள்,1 நடுநிலைப்பள்ளி, 13 உயர் தொடக்கப் பள்ளிகள், 42 ஆரம்ப பள்ளிகள், காது கேளாதோருக்கான 1 உயர்நிலைப் பள்ளி என 84 செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2020-21 கல்வி ஆண்டிற்கான ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்த கோவை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்காக பிரத்யேகமாக ஒரு இணைய லிங்க் மற்றும் தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. அந்த லிங்க் மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மாணவர் சேர்க்கைக்கான விவரங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டு பெற்றோர்கள் மாணவர்களை பள்ளியில் சேர்க்கலாம் என்றும் மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான அறிக்கையை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் வெளியிட்டுள்ளார்.

(http://forms.gle/9caEWry7YaW679xG6)

9842951127, 9442075061

மாநகராட்சி கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த பள்ளிகளில் தற்போது நிலவி வரும் கொரோனா தாக்குதலின் காரணமாக சமூக இடைவெளியுடன் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்காக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்

மேலும் படிக்க