• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

October 18, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு சீர் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.

கோவையில் கடந்த 2 தினங்களுக்கு மேலாக மிதமானது முதல், கன மழை பெய்து வருகின்றது. இதனால், கோவை மாநகராட்சி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம், பணிகளை முடக்கி விட்டு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்திரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கரும்புக்கடை, சாரமேடு உள்ளிட்ட்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், அப்பகுதியில் அடைப்பட்டு இருந்த கழிவு நீர் கால்வாய்கலை சீர் செய்து, மழை நீரை வெளியேற்றவும் உத்திரவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக சீர் செய்தனர்.

மேலும் படிக்க