• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

March 8, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில் கொரோனா விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர சமூக வலைதளங்களில் மாநகராட்சி சார்பாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒருபகுதியாக பிரபலமான திரைப்படக்காட்சிகள் மூலம் மீம்ஸ் வாயிலாக மாநகராட்சியின் பேஸ்புக் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கோவையில் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது. எனினும் மாநகராட்சி சார்பாக கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் எந்த சமரசமும் இல்லை. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்பட காட்சிகள் மூலம், அவசியம் இன்றி வெளியே வீட்டை வீட்டு வெளியே செல்லக்கூடாது, முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கிருமி நாசினி அல்லது சோப் கொண்டு கைகளை கழுவ வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் மீம்ஸ் பேஸ்புக்கில் பகிரப்பட உள்ளது. மாநகராட்சியின் புதிய முயற்சிக்கு மக்கள் பெருமளவில் விழிப்புணர்வு அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

மேலும் படிக்க