• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் 5 மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் திமுக உறுப்பினர்கள் வெற்றி

March 30, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 97 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும் கைபற்றியது.இந்நிலையில் மண்டல தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில் திமுகவில் வடக்கு மண்டலத்திற்கு கதிர்வேல்,தெற்கு மண்டலதிற்கு தனலட்சுமி,கிழக்கு மண்டலத்திற்கு லக்குமி இளஞ்செல்வி, மேற்கு மண்டலத்திற்கு தெய்வானை தமிழ்மறை, மத்திய மண்டலத்திற்கு மீனா லோகு ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

திமுக கூட்டணியில் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த 5 பேரும் மண்டல தலைவர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா சான்றிதழ்களை வழங்கினார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கதிர்வேல் ஆட்டோ ஒட்டுநனர்.ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்டவர்.இவர் கோவை மாநகராட்சி 10வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க