• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சியில் 1700 டன் குப்பைகள் அகற்றம்

November 5, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் தினமும் 800 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேர்வது வழக்கம். இதனிடையே கடந்த 4ம் தேதி தீபாவளி கொண்டாப்பட்டது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பறிமாறியும் தீபாவளியை கொண்டாடினார்கள். இதனால் கூடுதலாக 600 டன் முதல் 700 டன் வரை குப்பைகள் சேர்ந்தன. இதனைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான தூய்மைபணியாளர்கள் இந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘வழக்கமாக கோவை மாநகராட்சியில் 1000 டன் அளவுக்கு குப்பைகள் குவிவது வழக்கம். இந்த குப்பைகள் அனைத்தும் வாகனங்கள் மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது தீபாவளியை தொடர்ந்து கூடுதலாக 700 டன் குப்பைகள் சேர்ந்தன. இந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன,’’ என்றார்.

மேலும் படிக்க