• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மறைமாவட்டத்தில் முதன் முறையாக சி.பி.எஸ்.இ.பாடப்பிரிவு பள்ளி துவக்கம்

May 9, 2019 தண்டோரா குழு

கோவை மறை மாவட்டத்தை உள்ளடக்கிய திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில், 33 பள்ளிகள் உட்பட 140க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நீண்டநாட்களாக குறைந்த கட்டணத்தில் சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு பள்ளியை துவக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி எனும் சி.பி.எஸ்.இ.பாடப்பிரிவு பள்ளியை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவைனஸ் துவக்கி வைத்தார். இந்த துவக்க விழாவில் கோவை மறைமாவட்ட அனைத்து கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் மரியஜோசப் , ஸ்ரீதேவி சில்க்ஸ் உரிமையாளர் சிவகணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ்,

குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வியை வழங்கும் நோக்கத்தில் இந்த பள்ளி துவங்கப்பட்டுள்ளதாகவும் ஏழைகளும் இந்த பாடப்பிரிவில் பயில்வதற்கு வசதியாக இந்த பள்ளி துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க