• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல் ஒருவர் உயிரிழப்பு

June 5, 2018 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழத்துள்ளார்.

கோவை மாவட்டம் பேரூரை சேர்ந்த விஜய்(19) என்ற கைதி கல்லால் தாக்கியதில் பீளமேட்டை சேர்ந்த ரமேஷ்(48) என்பவர் உயிரிழந்தார்.இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கொலையாளி விஜய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பந்தைய சாலை காவல்நிலையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சில மாதங்களாக மத்திய சிறையில் உள்ள கைதிகள் தற்கொலை சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க