• Download mobile app
14 Jun 2025, SaturdayEdition - 3412
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை போலுவாம்பட்டியில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது

February 23, 2019 தண்டோரா குழு

கோவை போலுவாம்பட்டி காப்புக்காட்டில் வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது

கோவையில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை இன்று வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது.

கோவையை அடுத்த பெருமாள் கோவில் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அப்பகுதியில் சிறுத்தை ஓன்று பண்ணைகளில் புகுந்து ஆடுகள் மற்றும் கோழிகளை கடித்து சாப்பிட்டு வந்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். ஜன.19ல் ஆடு மற்றும் கோழிகளை கொன்றதால் சிறுத்தையை பிடிக்க கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதை அறிந்து வனத்துறையினர் அப்பகுதியில் 25 நாட்களுக்கு முன் சிறுத்தையை பிடிப்பதற்காக கூண்டை வைத்துள்ளனர். இதில் இன்று அதிகாலை தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த 6 வயது ஆண் சிறுத்தை வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது.பிடிபட்ட சிறுத்தை தெங்குமரஹாடா கொண்டு செல்லப்படுகின்றன.

மேலும் படிக்க