• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

May 27, 2020

கோவை பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் 18 க்கும் மேற்பட்ட இடங்கள் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த சூழ்நிலையில் அதில் ஒரு பகுதியான கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள பூ மார்க்கெட் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன் குமார் ஜடாவத் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

பூ மார்க்கெட் பகுதி எப்பொழுதும் வியாபாரிகளும் பொதுமக்களும் நிறைந்த பகுதியாக காணப்படும் கோவை மாவட்டத்திற்கான ஒட்டுமொத்த பூக்கள் விற்கும் இடமாகும். இதனால் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா?
அனைத்து பணிகளும் சரியான முறையில் இயங்குகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

IMG-20200525-WA0098

அப்போது அவர் கூறுகையில்,

ஏற்கனவே இந்த பகுதி ரெட் ஜூனுக்குள் உள்ளது.இதனால் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் சமூக இடைவெளி கடைபிடிக்க படாததால் தற்போது வைரஸ் வேகமாக பரவி வருகிறது.எனவே கோவையிலும் இதுபோன்று நடக்காமல் இருக்க தற்போது மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம். இதற்கு முன்னர் இந்த பகுதியில் பூக்களை விற்பதற்காக தனியாக கடையில் அமைத்துக்கொடுக்கப்பட்டது தற்போது இந்த பகுதியின் வரைபடங்களை எடுத்து ஆராய்ந்து நல்ல முறையில் சமூக இடைவெளியுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அதன் முதற்கட்டமாக தான் தற்போது இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உள்ளோம் என்றார்.

மேலும் படிக்க