March 1, 2021
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு 39வது வார்டு பீளமேடு மேம்பாலம் அருகே நேரு நகர் பகுதியில் பாஜகவை சேர்ந்த நடராஜன் என்பவரது வீட்டில், அதிமுக வார்டு செயலாளர் மனோகரன் என்பவருக்கு சொந்தமான மாருதி 800 காரில் பொதுமக்களுக்கு வழங்க ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி படம் பொறித்த கவரில் வேட்டி, சேலை, சில்வர் தட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதையறிந்த அப்பகுதி திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அந்த காரையும், வீட்டையும் சிறை பிடித்தனர். இதுகுறித்து திமுகவினர், தேர்தல் அதிகாரியிடத்தில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரி ஆனந்தகுமார் காரை பார்வையிட்டார். தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.