• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

April 26, 2019 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி மேலாண்மைக் கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 400 எம்.பி.ஏ. மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.

கோவை,அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.மேலாண்மை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பி.எஸ்.ஜி நிறுவனங்களின் அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இதில் பேசிய கல்லூரியின் இயக்குனர் விஜயா, இன்று கல்லூரி படிப்பை முடித்து வாழ்க்கையை துவங்கும் மாணவர்கள் இனி வரும் பல்வேறு கட்டங்களில் எதிர் கொள்ளும் சவால்களில் வெற்றி பெற்று முன்னேற வாழ்த்துவதாக தெரிவித்தார்.

விழாவில்அமெரிக்காவின் டொலீடோ பல்கலைக்கழகத்தின் தலைவரான டாக்டர் ஷரோன் கேபர்,மற்றும் டீன் முனைவர் அன்னே எல். பாலாஸ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் டொலீடோ பல்கலைகழக மாணவ,மாணவியர்களுக்கும் 220 பேருக்கும் மற்றும் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் 180 பேர் என மேலாண்மை கல்லூரியில் பயின்ற 400 எம்.பி.ஏ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கப்பட்டது.

விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க