• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 200 குழந்தைகளுக்கு காக்ளர் இம்பிளேன்ட் சிகிச்சை

April 4, 2019 தண்டோரா குழு

கோவையில் காது கேளாத வாய் பேச இயலாத 6 வயதிற்கு உட்பட்ட 200 குழந்தைகளுக்கு அரசு காப்பீட்டு திட்டம் மூலமாக கோவை பிஎஸ்ஜி மருத்துவமனை காக்ளர் இம்பிளேன்ட் சிகிச்சை செய்துள்ளது.

பிறவியிலேயே காது கேளாத வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு தகுந்த நேரத்தில் முறையான சிகிச்சைகள் அளிக்கும் போது விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.இது குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், சிறுவர்களுக்கான Cochlear Implant சிகிச்சைக்கு சாதாரணமாக ரூ. 7 லட்சம் வரை செலவாகும். கடந்த இரண்டரை வருடங்களில் காது கேட்காத, வாய் பேச முடியாத 200 குழந்தைகளுக்கு தமிழக அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் Cochlear Implant சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் ஆனந்த் மற்றும் அவரது குழுவினர் மூலமாக இலவசமாக அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது இந்த குழந்தைகளுக்கு பேசுவதற்கான சிகிச்சைகள் அளித்து கொண்டிருக்கிறோம். இதனால் அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் மகிழ்ச்சியைப் பார்க்கிறோம். குழந்தைகளை பேச வைப்பது நல்ல விஷயம். என்னுடைய அனுபவத்தில், என்றைக்குமே மனநிறைவை தரக்கூடிய நிகழ்ச்சி இது என அவர் தெரிவித்தார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் அறுவை சிகிச்சைகள் செய்து குணமடைந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் படிக்க