• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் நாளை உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்

September 28, 2022 தண்டோரா குழு

சுதந்திர இந்தியாவுடன் 1947 முதல் பயணித்து வரும் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி (75 வருடங்கள்) தனது பவள விழாக் கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றது. அந்நிகழ்வின் ஒரு பகுதியாக விருந்தோம்பல் துறை சார்பாக உலக சுற்றுலா தினம் 29.09.2022 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் D. பிருந்தா வரவேற்புரை ஆற்றுகிறார். PSG அறநிலையத்தின் நிர்வாக அறங்காவலர் L. கோபாலகிருஷ்ணன் விழா தலைமையேற்கிறார்.

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் Dr. M. மதிவேந்தன் சிறப்புரையாற்றி,சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை கல்வி மேம்பாட்டிற்கு வித்திட்டவர்களுக்குச் சிறப்புச் செய்கிறார். மேலும் சுற்றுலா தினப் போட்டிகளில் வென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவச் செல்வங்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார். மேலும் விருந்தோம்பல் துறை மாணவர்களால் நடத்தப்படும் “Let’s Tour” கல்லூரி வளாக நிறுவனத்தைத் துவக்கிவைக்கின்றார்.

இறுதியாக துறைத் தலைவர் S. ஜெகதீசன் நன்றியுரை வழங்குகிறார். இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வுப்படிப்பு என 14000 மாணவர்களைக் கொண்ட பழமையான கல்லூரி PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்பது பெருமைக்கும், சிறப்பிற்கும் உரியதாகும்.

மேலும் படிக்க