July 27, 2019
தண்டோரா குழு
கோவை மதுக்கரை சாலை, பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில், குழந்தைகளுக்காக குழந்தைகளால் சிவப்பு வண்ண நாள் கொண்டாடபட்டது.
வண்ணங்களில் சிவப்பு ஆபத்தை மட்டும் உணர்த்துவதில்லை.தூய்மையான அன்பையும்,பாசத்தையும் வெளிபடுத்த சிவப்பு வண்ணம் சிவப்பு ரோஜாவாகவும், சிவப்பு இதயமாகவும் கொண்டாடப்படுகிறது.குழந்தைகள் மத்தியில் வண்ணங்களின் தன்மையை அறிந்து கொள்ளும் விதமாக கோவை மதுக்கரை சாலை,பிருந்தாவன் வித்யாலயா பள்ளியில், ஆண்டுதோறும் வண்ணங்களை மையமாக வைத்து விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு நிகழ்ச்சி பள்ளி அரங்கத்தில், 5 வயது குழந்தைகளுக்காக குழந்தைகளால் சிவப்பு வண்ண நாள் கொண்டாடபட்டது. இதில் பள்ளி தாளாளர் வசந்த ராஜான் தலைமை ஏற்றார்.பள்ளி முதல்வர் வனிதா திருமூர்த்தி முன்னிலை வகித்தார். கேஜி மருத்துவமனை மருத்துவர் டாக்டர். கிருத்திகா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளி குழந்தைகள் சிவப்பு வண்ணம் தொடர்பான பழங்கள், காய்கறிகள், வாகனங்கள், இரத்த தான விழிப்புணர்வு, சாலை விதி முறைகள், தீ அணைப்பு வாகனம், போன்ற பல்வேறு தலைப்புகளில், குழந்தைகள் அணிவகுத்து வந்து உரையாற்றினர்.இதனை தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
மேலும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், ஆர்வமுடன் இரத்த தானம் செய்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விழாவின் சிறப்பு அம்சமாக, சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் ஆப்பிள் உண்டியல் வழங்கபட்டது.