• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பவர் டெல்லர் இயந்திரம்

March 25, 2022 தண்டோரா குழு

கோவைபட்டு வளர்ச்சி துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பவர் டெல்லர் இயந்திரம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் பட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி இன்று கோவை மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தில் இத்துறையின் சார்பில் 7 பட்டு விவசாயிகளுக்கு பவர் டெல்லர் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டு பட்டு விவசாயத்தில் சிறப்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்த 3 விவசாயிகளில் முதல் இடத்தை பிடித்த வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமிக்கு 25,000 ரூபாய், 2ம் இடத்தை பிடித்த நரசிபுரம் பகுதியை சேர்ந்த முருகசாமிக்கு 20,000 ரூபாயும் மூன்றாம் இடத்தை பிடித்த குமாரபாளையத்தை சேர்ந்த சித்ரா விற்கு 15,000 ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் 2 விவசாயிகளுக்கு பட்டு மனை அமைக்க தலா 1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டது. இவற்றை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

மேலும் படிக்க