March 25, 2019
தண்டோரா குழு
கோவை தொகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவோம் என கோவை தொகுதிக்கான பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக வின் கோவை தொகுதிக்கான வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமே தேர்தல்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் நடத்தப்படுவதுதான். கடந்த காலங்களில் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் தேர்தல் கமிஷனால் ஒன்றன்பின் ஒன்றாக அவை அகற்றப்பட்டு வருகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கியுள்ளது. நிலையான ஆட்சி மத்தியில் இல்லையென்றால் தேசத்தின் முன்னேற்றம் தடைபட்டுவிடும். ஒரு கருத்துமிக்க சிந்தனை தான் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தரும். மோடியின் ஐந்தாண்டு காலத்தில் விலைவாசி உயர்வே இல்லாத காலமாக உள்ளது.
உலகத்தை கண்டு இந்தியா பயப்படாமல் இந்தியா என்ன கருத்தை முன் வைக்கிறது என்று உலக நாடுகள் பார்க்கும் அளவுக்கு மோடி தேசத்தை உயர்த்தியுள்ளார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் உலக வங்கியில் கடன் வாங்காத பாரத பிரதமர் என மோடி பெயர் பெற்றுள்ளார். கோடானு கோடி மக்களுக்கு இலவச கேஸ்,கழிவறை,மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. 2024 க்குள் அனைத்து குடும்பங்களுக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். ஈபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் தென்னிந்திய நதி இணைப்பை மத்திய அரசிடம் எடுத்து வைத்துள்ளனர்.
மோடி ஆட்சி வரும்போது கோதாவரி காவிரியுடன் இணைக்கப்பட்டு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சிணை முழுமையாக தீரும் நாற்பது இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டனி வெல்லும் கோவை தொகுதியில் போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவோம் அவினாசி சாலையில் அமைக்கப்பட உள்ள மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிக்கப்படும். அப்போது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெருக்கடி இருக்காது. மேட்டுப்பாளையம் சாலை அகலப்படுத்துவதோடு தேவைப்படும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படும். ரயில் வசதியை பெருக்குவோம்.தென் தமிழகத்தில் அதிக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவோம்.
மோடி வந்த பிறகு தான அதிக மின்பாதை உருவாகியிறுக்கிறது. முதல்வர், துணை முதல்வர்,பாரத பிரதமர் உள்ளிட்டோர் பிரச்சாரத்திற்காக கோவைக்கு வருவார்கள். பிரேமலதா கோவை பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வார்கள். வாசன் அன்புமணி ராமதாஸ் என கூட்டனி கட்சி தலைவர்கள் எல்லோரும் வருவார்கள். பாஜக அதிமுக அவரவர் கொள்கையை வைத்துள்ளார்கள். கோவை மாநகருக்கு விரைவில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும். விமான நிலையம் விரிவு படுத்தப்படாதது தான் தொழில் வளர்ச்சி பெறாமல் உள்ளது. எங்கும் இல்லாத வகையில் கோவை விமான நிலையம் விரிவு படுத்தப்படும் சிறு குறுந்தொழில் மீது அக்கறையுள்ள அரசாக மக்திய அரசு செயல்படுகிறது.தற்போதுள்ள சிரமங்கள் கண்டறியப்பட்டு களையப்படும். அவர்களுக்கான ஆதரவு முன்பை விட அதிகளவு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.