• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை துடியலூர் அருகே அரசு விரைவு பேருந்து – டெம்போ நேருக்கு நேர் மோதி விபத்து

April 13, 2018

கோவை துடியலூர் அருகே அரசு விரைவு பேருந்தும், டெம்போவும் நேருக்கு நேர் மோதியதில் டெம்போ டிரைவர் பலியானார்,10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

கோவை துடியலூர் அருகிலுள்ள வெள்ளகிணர் பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்து கொண்டு இருந்தது.அப்போது கோவையில் இருந்து வந்து கொண்டு இருந்த இரண்டு சக்கர வாகன ஓட்டி திடீரென வெள்ளகிணர் பிரிவு அருகில் வலது புரம் செல்லுவதற்காக திரும்பியுள்ளார்.இதனால் எதிரில் வந்த அரசு பேருந்தின் டிரைவர் இரண்டு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க அவரும் பேருந்து வந்த வேகத்தில் வலது புரம் திருப்பியுள்ளதாக தெரிகிறது.

அப்போது கோவையில் இருந்து துடியலூருக்கு சிமெண்ட் மண் ஏற்றி சென்று கொண்டு இருந்து டெம்போ மீது பேருந்து மோதியது. இந்த மோதலில் இரண்டு வாகனமும் பலத்த சேதமடைந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த டெம்போ டிரைவர் பாண்டித்துரையை 108 ஆம்புலன்ஸில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டித்துரை இறந்துவிட்டார்.

மேலும் படிக்க