• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை-திருப்பதி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

April 26, 2022 தண்டோரா குழு

கோவை-திருப்பதி விரைவு ரயிலில் 2 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:

கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் கோவை -திருப்பதி விரைவு ரயிலில் ஏப்ரல் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதியுடைய பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி என 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

அதேபோல்,திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமைகளில் இயக்கப்படும் திருப்பதி-கோவை விரைவு ரயிலில் ஏப்ரல் 23ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதியுடைய பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி என 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்க