• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை திமுக மகளிரணியினர் மாநகர் காவல் ஆணையரிடம் புகார்

August 24, 2023 தண்டோரா குழு

கோவை திமுக மகளிரணியினர் மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

மதுரை அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் ராசா குறித்து அவதூறாக பாடல் பாடியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்து கோவை திமுக மகளிரணியினர் மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

கடந்த 20 ஆம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி க்கள் கனிமொழி மற்றும் ராசா குறித்தும் அவதூறான பாடிய பாடல் விவகாரத்திற்கு கடும் கன்டணங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணி சார்பில் அருவறுக்கத்தக்க வகையில் பாடல் பாடியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளர், ஆணையரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மகளிரணி சார்பில் மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் பெண் தலைமை தாங்கிய அதிமுக கட்சியினர் பெண் எம்.பி குறித்து மிகவும் அருவறுக்கத்தக்க பாடலை பாடியுள்ளனர். அதனை முன்னாள் முதல்வர் பார்த்து ரசிப்பது மோசமான செயல் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க