January 19, 2019 தண்டோரா குழு
கோவையில் ஜிஆர்ஜியின் நிறுவன நாளை முன்னிட்டு நூற்றாண்டு நினைவாக வாழ்நாள் சாதனையாளர்களுக்கென சிறந்த விருதுகள் வழங்கப்பட்டது.
கோவை அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள ஜிஆர்ஜி அறக்கட்டளையின் கல்லூரி மற்றும் பள்ளியானது கோவையில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த ஜிஆர்ஜி யின் 100ஆவது ஆண்டின் நினைவாக கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் உணவுத்திறன் நிர்ணய சோதனைக்கூடம் நிறுவப்பட்டது. கல்லூரியின் மைதானத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்வரை ஜிஆர்ஜி உருமாற்றம் என்ற பொ௫ளில் மாணவரின் குழு நடனம் நடைபெற்றது.
மேலும் தொழில்நுட்பமும் இயற்கையும் மற்றும் அழகு சாதன ஆலோசகர் புதிதாக தொழில்முனைவோ௫க்கு தன் தந்தையின் பெயரில் ” சின்னி கி௫ஷ்ணன் படைப்பு வி௫துகள் வழங்கப்பட்டன. உலக தரமான கையேட்டின் சிறப்பு குறிப்பையும் வெளியிட்டனர். இதில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு சிறந்த விருதுகள் மற்றும் தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் கடலோர பகுதிகளில் உள்ளவர்களுக்கு உலக வர்க்கம் தொழில்சார் கல்வியை வழங்கும் நோக்கம் கொண்ட சிகே நிறுவன தலைவரான ரங்கநாதனுக்கு இந்த ஆண்டின் மிக மதிப்புமிக்க தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்றவர் ஞாபகார்த்த விரிவுரையாளர், விருதுகளுக்கான விளக்க காட்சிகளும்,GRG உணவு தர பரிசோதனை ஆய்வகத்தின் திறப்பு விழா போன்றவை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ்பாய், ரங்கசாமி, நந்தினி ரங்கசாமி மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.