• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சுண்டக்காமுத்தூரில் சைக்கிள் போட்டி

December 27, 2020 தண்டோரா குழு

நல்லறம் அறக்கட்டளை மற்றும் வெஸ்டன் வேலி சைக்கிளிங் சார்பில் மாபெரும் எம்.டி.பி சேலஞ்ச் எனும் 3-வது ஆண்டாக சைக்கிள் போட்டி கோவை சுண்டாகாமுத்தூர் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியினை நல்லறம்
அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி. அன்பசரன் வழிகாட்டுதல்படி, நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியானது 8 பிரிவுகளில் நடைபெற்றது. 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3.5 கிலோமீட்டர் சைக்கிள் போட்டியும், 14 வயது முதல் பெரியவர்களுக்கான போட்டி 7.5 கிலோ மீட்டர் சைக்கிள் போட்டியும் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கான நல்லறம் அறக்கட்டளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நல்லறம் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் நல்லறம் முருகவேல், ரோட்டரி மணிகண்டன், எஸ். ஆர் குமார், கவுன்சிலர் சிவகுமார், ஜெய்சங்கர், வெஸ்டன்வேலி சைக்கிளிங் தலைவர் ராபர்ட் ஆண்டனிராஜ், செயலாளர் சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க