• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிறுமி பாலியல் வழக்கு : ஒரே வரியில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி உச்ச நீதிமன்றம்

August 1, 2019 தண்டோரா குழு

கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு, கோவையில் அக்கா முஸ்கான், தம்பி ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருடன் ரித்திக்கும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கில் மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் மோகன கிருஷ்ணன் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனை அளித்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம் என்று ஒரே வரியில் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் படிக்க