August 1, 2019
தண்டோரா குழு
கோவை சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி மனோகரனுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு, கோவையில் அக்கா முஸ்கான், தம்பி ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டனர். இதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவருடன் ரித்திக்கும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியது.
இந்த வழக்கில் மோகன கிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் போலீஸ் நடத்திய என்கவுண்டரில் மோகன கிருஷ்ணன் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனை அளித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாங்கள் மரண தண்டனையை உறுதி செய்கிறோம் என்று ஒரே வரியில் உத்தரவு பிறப்பித்தனர்.