• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சிபிசிஐடி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது !

August 17, 2020 தண்டோரா குழு

கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக மூடப்பட்டது.

கோவை பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பணிபுரிந்த இரு சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை கொரொனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதனையடுத்து,அங்கு பணிபுரியும் 30 க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

இந்நிலையில்,இன்று சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் வாகன ஒட்டுனர் ஒருவருக்கும் தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.இதனையடுத்து தற்காலிகமாக சிபிசிஐடி அலுவலகம் மூடப்பட்டது.

இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு இருந்த சி.பி.சி.ஐ.டிபோலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க