• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை சின்னவேடம்பட்டி ஏரியை சுற்றி மரக்கன்றுகளை நட்டு சொட்டுநீர் பாசன வசதியையும் ஏற்படுத்திய தன்னார்வ அமைப்பினர்

July 16, 2019 தண்டோரா குழு

கோவை சின்னவேடம்பட்டி ஏரியை சுற்றி பல வகையான மரக்கன்றுகளை நட்டு,அதற்கு சொட்டுநீர் பாசன வசதியையும் ஏற்படுத்தி உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவையை அடுத்த சின்னவேடம்பட்டியில் உள்ள ஏரி அந்த பகுதியைச் சுற்றியுள்ள உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, உருமாண்டம்பாளையம், நல்லாம்பாளையம்,சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழி செய்கிறது. இந்த ஏரியின் நீர் ஆதாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீர் கணுவாய் பகுதியில் தொடங்கி துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால் வழியாக சின்னவேடம்பட்டி ஏரிக்கு வருகிறது.இந்நிலையில் நீண்ட காலமாக இந்த ஏரி நீரில்லாமல் வற்றியதை அடுத்து சின்ன வேடம்பட்டி ஏரி பாதுகாப்பு குழுவினர் சார்பாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து துடியலூரில் இருந்து வெள்ளக்கிணறு வழியாக ராஜவாய்க்காலை தூர்வாரி அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும், குப்பைகளை அப்புறப்படுத்தியும் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது பருவமழைக்காலம் தொடங்கி விட்டதால் சீரமைப்பு பணிகள் செய்து வரும் நிலையில் செய்தியாளர்களிடம் குழுவின் உறுப்பினர் சிவராஜ் பேசுகையில், மாநில அரசின் நிதி உதவியுடன் ஏரி சீரமைப்பு பணிகள் செய்து வருவதாகவும், இதுவரை ஏரியை சுற்றி சுமார் பல வகையான மரக்கன்றுகளை நட்டு, அதற்கு சொட்டுநீர் பாசன வசதியையும் ஏற்படுத்தி உள்ளோம்.மேலும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.இந்த ஏரியில் 84 வகையான பறவையினங்கள் வாழ்ந்து வருவதாக வன உயிரின கணக்கெடுப்பின்படி தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.இது போன்று தமிழகம் முழுவதும் உள்ள ஏரி குளங்களை பொதுமக்கள் முன் வந்து செய்யும் போது தமிழகத்தின் தற்போது நீர் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க