• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொடிசியாவில் சைமா சார்பில் டெக்ஸ்ஃபேர் 2022 என்ற ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் சர்வதேச கண்காட்சி

June 26, 2022 தண்டோரா குழு

விழாவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு,பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

சைமா என்றழைக்கப்படும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், 2001 முதல் சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் சர்வதேச கண்காட்சியான டெக்ஸ்ஃபேர் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அதன் உபயோகிப்பாளர்களான ஜவுளி ஆலைகளையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்து பரஸ்பரம் பயன் அடைய செய்வதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும்.

13வது முறையாக நடைபெறும் டெக்ஸ்ஃபேர் கண்காட்சி ஜூன் 24ல் கோவை கொடீசியா கண்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது.
இந்த நிகழ்வினை மத்திய ஜவுளித்துறை அமைச்சர், பியுஷ் கோயல் துவக்கி வைத்தார். மேலும்,மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர், எல்.முருகன் விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

துவக்கவிழாவில் சைமாவின் தலைவர், ரவி சாம்,துணைத் தலைவர்கள் எஸ்.கே.சுந்தரராமன்,துரை பழனிசாமி மற்றும் ஜவுளி துறை சேர்ந்த முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஜூன் 24-27 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 220 ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் 295 ஸ்டால்களில் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்திவருகின்றனர்.

தமிழகத்தைத் தவிர, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரகாண்ட், கர்நாடகா, டாமன் ரூ டையூ மற்றும் கோவா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி இயந்திர, உதிரிபாகங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் தங்கள் பொருட்களை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

இது தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கமான சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளையும் மற்றும் ஜப்பான், சீன நாடுகளையும் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெற்றனர்.

நாட்டின் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தியில் 70 சதவீதத்தை கோவை மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகளவில் கோவை ஜவுளித் தொழில் உற்பத்தி மையமாக திகழ்வதால், “டெக்ஸ்ஃபேர்” கண்காட்சியில் பங்கேற்பவர்களுக்கு நல்ல வியாபாரம் கிடைக்கும் என்று எதிர்பார்கப்பதுகிறது. இந்த கண்காட்சியின் மூலம் ரூ.1,500 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க